காற்று மாசுபாட்டில் இந்தியா முதலிடம்: சுகாதார அமைப்பு எச்சரிக்கை
உலகின் பல்வேறு நகரங்களில், காற்றின் தரம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. குறிப்பாக, இந்தியாவில் பல நகரங்களில் காற்றின் தரம், மனிதர்கள் சுவாசிக்கத் தகுதியற்ற அளவிற்கு மிகவும் மாசடைந்து வருகிறது.
தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் புகை, வாகனப்புகை எனப் பல்வேறு காரணங்களால் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், 'ஐ.கியூ., ஏர் - ஏர் விசுவல்' என்ற நிறுவனம் உலகில் காற்று மாசுபாடு அதிகமாக உள்ள நகரங்களின் பட்டியலை நேற்று வெளியிட்டது.
அதில், உலகில் மிகவும் மாசடைந்த நகரங்கள் உள்ள நாடுகளின் பட்டியலில், கடந்த ஆண்டு ஏழாம் இடத்தில் இருந்த இந்தியா, இரு படிகள் முன்னேறி, ஐந்தாம் இடத்திற்கு வந்துள்ளது. மேலும், உலக அளவில், மிகவும் காற்று மாசடைந்துள்ள, 30 நகரங்களில், 21 நகரங்கள் இந்தியாவில் உள்ளதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக, புதுடில்லியின் காஜியாபாத் உலகின் மிக மோசமாக காற்று மாசடைந்து வரும் நகரமாக உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பகுதியின் காற்று மாசு, முன்பை விட, மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![](https://img.dinamalar.com/data/gallery/gallerye_125030779_2489151.jpg)
0 comments:
Post a Comment