current affairs February 2020 and gk
27/2/2020
1. ஸ்ரீஹரிகோட்டாவில் 5ம் தேதி ஏவப்படுகிறது, 'ஜிஐசாட் - 1'
இந்த ஆண்டு, நாட்டின் பாதுகாப்புக்காக மட்டும், 10 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ, இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.புவி கண்காணிப்பு, வானிலை ஆய்வு, பேரிடர் மீட்பு பணிகள் ஆகியவற்றுக்காக, இரண்டு, 'ஜியோ இமேஜிங்' செயற்கைக்கோள்களை தயாரிக்க, இஸ்ரோ முடிவு செய்தது. இதற்கு, 'ஜிஐசாட்- 1, ஜிஐசாட் - 2' என, பெயரிடப்பட்டது.இதில், ஜிஐசாட் - 1ஐ, மார்ச் மாதத்திலும், ஜிஐசாட் - 2ஐ, ஐூன் மாதத்திலும் விண்ணில் செலுத்த, இஸ்ரோ திட்டமிட்டது.இதன்படி வரும், மார்ச் 5ம் தேதி, ஜிஐசாட் - 1 விண்ணில் செலுத்தப்பட உள்ளது என, இஸ்ரோ தெரிவித்துள்ளது.ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின், இரண்டாவது தளத்திலிருந்து, 5ம் தேதி மாலை, 5:43 மணிக்கு, ஜிஐசாட் - 1 விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ஜி.எஸ்.எல்.வி., - எப் 10 ராக்கெட், இந்த செயற்கைக்கோளை விண்ணுக்கு சுமந்து செலகிறது. ஜி.எஸ்.எல்.வி., வரிசையில், விண்ணுக்கு இஸ்ரோ செலுத்தும், 14வது ராக்கெட் இது. ஜிஐசாட் - 1 செயற்கைக்கோள், 2,275 கிலோ எடை கொண்டது. விண்ணில் செலுத்தப்பட்ட பின், இது புவி கண்காணிப்பு, வானிலை ஆய்வு பணிகளில் ஈடுபடும் என, இஸ்ரோ தெரிவித்துள்ளது.
2. சண்டிகரை சேர்ந்த இளம்பெண் ஒருநாள் போட்டியில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
ஆந்திர மாநிலம் கடப்பாவில் நடந்த 19 வயதினருக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சண்டிகர் வீராங்கனை காஷ்வி கவுதம் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்தார்.
2. சண்டிகரை சேர்ந்த இளம்பெண் ஒருநாள் போட்டியில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
ஆந்திர மாநிலம் கடப்பாவில் நடந்த 19 வயதினருக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சண்டிகர் வீராங்கனை காஷ்வி கவுதம் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்தார்.
0 comments:
Post a Comment